இரண்டு கன்னியாஸ்திரிகள் கர்ப்பம்… பாதிரியார்களின் பாலியல் சீண்டல் அம்பலம்..!


சமீபகாலமாக கன்னியாஸ்திரிகள் சிலர் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் இத்தாலியில் சிசிலி துணைப்பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், சமீபத்தில் சொந்த நாடான ஆப்பிரிக்காவுக்குத் தொண்டாற்றச் சென்றுள்ளனர்.

அப்போது அதில் 34 வயதான ஒரு கன்னியாஸ்திரிக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு ஆளான அவர், கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் கர்ப்பமுற்றுள்ளார்.

இந்நிலையில் கன்னியாஸ்திரி வாழ்க்கையின் தகுதியை இழந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க நிலைக்கு திருச்சபை தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சபை சார்பில் வெளியான குறிப்பில், இரண்டு கன்னியாஸ்திரிகளும் சொந்த நாட்டுக்கு சென்ற இடத்தில் வெளிப்படையான பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கற்புக்கான விதிமுறையை மீறியதால் இனி அவர்கள் துறவு வாழ்க்கை வாழமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!