தாலியை கழற்றி வீசி மணமகனுக்கு ‘பளார்’ என கொடுத்த மணமகள்… அதிர வைத்த காரணம்!


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் திருமணம் ஆன சிறிது நேரத்தில் தாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் பளார் என்று அறைந்த மணமகளின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியான இவருக்கும் ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி அவர்களது திருமணம் அங்குள்ள சோமேஸ்வரர் கோவிலில் நேற்று உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கெட்டி மேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

தாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமகன் சம்ப்ரதாயப்படி மணமகளுக்கு நெற்றியில் பொட்டு வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கையை தட்டிவிட்ட மணமகள் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனை கவனித்த அர்ச்சகர் மணமகளிடம் விசாரித்தார். அப்போது மேலும் ஆத்திரம் அடைந்த மணமகள் அவரையும் சரமாரியாக தாக்கினார்.

இதற்கிடையே மணமகன் கட்டிய தாலியையும் கழற்றி வீசிய மணமகள் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் இரு வீட்டாரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அர்ச்சகரும் இரு வீட்டாரையும் வெளியே போகுமாறு கூறி விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இரு வீட்டாரும் கோவிலில் இருந்து வெளியேறி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த பெண்ணுக்கு சற்று மனநிலை பாதித்ததாகவும் திருமணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லாததும் தெரியவந்தது. இதனால் இரு வீட்டாரும் கவலை தோய்ந்த முகத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர் விஜிக்கும் உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. வேறு ஒரு பெண்ணுடன் உடனே திருமணம் நடந்ததால் மணமகன் வீட்டார் மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து புதிய மணமக்களை வாழ்த்திய உறவினர்க்கள் விருந்து சாப்பிட்டு விட்டு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!