ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை சுஜித்தின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் சுமார் 80 மணி போராட்டத்திற்கு பிறகு பிணமாக மீட்டப்பட்டார். சுஜித் உடலுக்கு பல்வேறு தரப்பிரினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான்.
சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! https://t.co/gaK8HAC2tS
— M.K.Stalin (@mkstalin) October 29, 2019
இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் பக்கத்தில் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? சுஜித் இழப்பு குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு. இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!