சுர்ஜித் மீண்டு வந்து அம்மா, அப்பா என்றழைக்க வேண்டும்.. சரத்குமார் உருக்கமான பதிவு


அதிசயங்கள் நிகழும். சுஜித் மீண்டு வந்து அப்பா, அம்மா என்றழைக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து 4ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

திரைப்பட நடிகர் தாமு இன்று காலை சம்பவ இடத்துக்கே சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து சரத்குமார் வீடியோ மூலம் ட்விட்டரில் கூறியிருக்கையில் ஆழ்துளை கிணற்றில் போராடி கொண்டிருக்கும் குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும். அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.

அவன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்வோம். மணிகள் கடந்தாலும் அவன் மீட்கப்பட்டு அவனது தாய், தந்தையரை பார்த்து அம்மா , அப்பா என்றழைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இதுவே அனைவரது பிரார்த்தனையாகும். அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!