தென்கொரிய உடற்பயிற்சி மையத்தில் 29 இளைஞர்கள் தீயில் கருகி மரணம்..!


தென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பரவிய தீயில் சிக்கியும், புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!