கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி செய்த காரியத்தைப் பாருங்க..!


தனிமை அளவுக்கு அதிகமாக வாட்டியதால் கல்யாணமான நர்ஸ் ஒருவர்.. 50 சவரன் நகையுடன் டிக்டாக்கில் அறிமுகமான தோழியை இழுத்து கொண்டு ஓடிவிட்டார்! இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் போன ஜனவரி மாதம் கல்யாணம் நடந்தது. சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதனால் தனிமையில் அவதிப்பட்ட வினோதினி டிக்டாக் ஆப்பில் நுழைந்து நேரத்தை செலவிட ஆரம்பித்தார். அப்போதுதான் திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நெருக்கம் ஆனது.. கஷ்டப்பட்டு வேலை பார்த்து மனைவிக்கு அனுப்பும் பணத்தை அபிக்கு செலவு செய்து ஆட்டம் போட்டு வந்துள்ளார் வினோதினி.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, புது மனைவியை பார்க்க ஆசையுடன் லியோ வெளிநாட்டில் இருந்து வந்தார். ஆனால் மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்தது. இதனால் வினோதியின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் “நெருக்கமான” போட்டோக்களை கண்டு அதிர்ந்தார்.

இதையடுத்து வீட்டில் வெடித்தது புயல். மனைவியை மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்று நடந்த விஷயங்களை கூறி அறிவுறுத்தினார் லியோ. எத்தனை பேர் புத்தி சொல்லியும் வினோதினி கேட்கவே இல்லை போல தெரிகிறது.

கணவர் தனக்கு அணிவித்த 20 பவுன் நகை, தன்னுடைய அக்காவின் 25 பவுன் நகையை எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். அபியுடன் மகள் ஓடிவிட்டதை அறிந்து, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் போலீசில் தந்துள்ளனர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!