புதன் தோஷத்தை போக்க ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்…?


புதனால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.

திருவெண்காடு தலத்துக்குச் சென்று, புதனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது சிறப்பாகும். புதனுக்குரிய நாயுருவி சமித்து கொண்டு ஹோமம் செய்து, பச்சைப்பயறு தானம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும்.

மேலும், புருஷ சூக்தம் ஜபிப்பதும் விசேஷம். புதன்கிழமைகளில் திருப்பதிக்குச் சென்று, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனை வழிபடுவதும், காஞ்சிபுரம் சென்று ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீவரதராஜரையும் வழிபடுவதும் சிறப்பு. இதனால் கல்யாண தோஷம் நீங்கி நல்ல மண வாழ்க்கை அமையும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!