சொந்த பேத்திக்கு அசிங்கம் பிடித்த தாத்தா செய்த கொடூரம் 10 வருஷம் ஜெயில்!


8 வயசு சொந்த பேத்தியையே பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்று நாசம் செய்த தாத்தா இருதயதாசனை 10 வருஷம் ஜெயிலில் தூக்கி போட்டுவிட்டது மகிளா கோர்ட்!

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் ஹார்பர் ரோட்டை சேர்ந்தவர் இருதய தாசன். இவர்தான் அந்த தாத்தா.. 58 வயசு மீனவர்!

இவருக்கு 8 வயசில் ஒரு பேத்தி இருக்கிறாள் அதாவது மகன் வயிற்று மகள். இந்த பேத்தி உட்பட 3 குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள மணக்குடி கிராமத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுள்ளார். 3 குழந்தைகளும் அங்குள்ள பீச் மணலில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது பேத்தியை மட்டும், மறைவாக இருந்த பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்த விஷயத்தை சிறுமி பெற்றோரிடம் கதறி கொண்டே செல்லவும், பெற்றோரும் பதறியவாறே கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருதயதாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் 2016, ஜனவரி 2-ம் தேதி நடந்தது. எனினும் வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தாத்தா இருதய தாசனுக்கு 10 வருஷ ஜெயிலும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் ஆர் டி. சந்தோசம் உத்தரவிட்டார். ஒருவேளை 50 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் 2 வருஷம் ஜெயில் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பில் கூறினார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!