சிறுமியை சிறை வைத்து 5 பேர் கூட்டாக பலாத்காரம் – சென்னையில் பயங்கரம்..!


சென்னையில் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சென்னையில் சமீபத்தில் அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் சிறுமி ஒருவரை 5 பேர் கும்பல் கூட்டாக கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறினார். கடந்த 3-ந்தேதி வீட்டை விட்டு சென்ற அவர் புரசைவாக்கத்தில் நிஷா என்பவரின் வீட்டில் அடைத்து சிறை வைக்கப்பட்டதும் 5 இளைஞர்கள் அவரை கூட்டாக கற்பழித்திருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 நாட்களாக சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, இதுபற்றி தனது வீட்டில் முறையிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக சபீனா, நிஷா மற்றும் முபீனா ஆகிய 3 பெண்கள் போலீசில் சிக்கினர். இவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி சிறுமி தவறாக வழிநடத்தப்பட்டது தெரிய வந்தது.

சிறுமியை கற்பழித்த 5 வாலிபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. நிஷாவிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!