இன்று அடடா ஆரம்பமே! ஐபிஎல் திருவிழாவை விசில் போட்டுக் கொண்டாடுவோம்..!


சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பன்னிரெண்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலகலாமாக தொடங்கவுள்ளது.

எட்டு அணிகளுக்கு இடையேயான 12ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னை அணியை பொறுத்தவரை அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். சுரேஷ் ரெய்னா மூன்றாவதாகவும், தோனி நான்காவதாகவும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.-Source: etvbharat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!