ஜிம்’ மீது மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – பரிதாபமான உயிரிழந்த 6 வயது சிறுவன் ..!

டெல்லி இண்டர்பூரி ஜேஜே காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்திற்கு மேல் வீடுகள் உள்ளன. நேற்றிரவு திடீரென நான்கு மர்ம நபர்கள் இந்த ‘ஜிம்’ மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதில் ‘ஜிம்’ பலத்த சேதம் அடைந்தது. அப்போது ‘ஜிம்’மிற்கு மேல் உள்ள வீட்டில் பிரின்ஸ் ராஜ் என்ற 6 வயது சிறுவன் இருந்துள்ளான். மர்ம நபர்கள் சுட்டதில் ஒரு குண்டு பிரின்ஸ் மீது பாய்ந்தது. இதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், அந்த கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற ஒருவர் மீதும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.