3 மாத குழந்தையை தரையில் ஓங்கி அடித்த மகள்.. தாய்- மகள் தகராறில் நடந்த கொடூரம்..!


குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தரையில் தூக்கி போட்டதால் 3 மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி அடுத்த தொடுவாய் கீழத் தெருவை சேர்ந்த ஆறுமுகம்-அம்புஜம் (வயது45) ஆகியோரின் மகள் வினோதா (வயது 22). இவருக்கும், சின்னங்குடியை சேர்ந்த ஜெககேந்திரன் ஆகியோருக்கும் திருமணமாகி 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வினோதா கோபித்துக் கொண்டு தனது தாய் அம்புஜம் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு தங்கியிருந்த வினோதாவிடம் நேற்று இரவு குடும்ப பிரச்சினை பற்றி பேசியபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகளை அம்புஜம் கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திர மடைந்த வினோதா தனது கையில் வைத்திருந்த 3 மாத குழந்தையை தூக்கி தரையில் போட்டுள்ளார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோதாவை கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!