காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்ற வாலிபருக்கு நிகழ்ந்த விபரீதம்…!


கேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மகன் குரியன் ஜேக்கப் (வயது 25). இவர் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர்.

இந்நிலையில் நேற்று குரியன் ஜேக்கப் திருவல்லா எம்.ஜி.ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது திருச்சூரில் இருந்து தென்காசிக்கு புறப்பட்ட சுற்றுலா பஸ் குரியன் ஜேக்கப் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குரியன் ஜேக்கப் படுகாயம் அடைந்தார்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்தவெள்ளத்தில் வாலிபர் கிடந்தார். அவரை மீட்டு செங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குரியன் ஜேக்கப் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!