சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் அணியில் சேர்ப்பு..!


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று சர்ச்சைக்குள்ளான கே.எல். ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை சேர்க்க தேர்வாளர்கள் முதலில் முடிவு செய்தனர். பின்னர் அகர்வால் விளையாட இயலாத சூழ்நிலையில் அவருக்கு பதில் பஞ்சாபை சேர்ந்த சுப்மேன் கில்லை அணியில் சேர்க்க முடிவானது. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!