“அந்த” ஆசை இப்போது இல்லை நடிகை – கீர்த்தி சுரேஷ் பேட்டி


மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. நடிகையாக
வேண்டும் என்று படிக்கும்போது இருந்தே ஆசை எதுவும் இல்லை. மாடலிங் செய்து வந்தேன்.

ஆனால் கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர்.

என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். வரும்போது பார்க்கலாம். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மனதில் ஒரு துளிகூட ஆசை இல்லை.

இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!