புத்தாண்டில் மீன ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும்!


குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும் நிலை வரும்.

நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் துவக்கம் சிறப்பாகவே இருக்கும். பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வீடு கட்டும் பணி தொடரும். வாழ்க்கைத்துணை மூலம் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.


திடீர் பயணங்களால் சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் சமாளித்து விடும் மனப்பக்குவம் உண்டாகும். தாயாரது உடல் நலனில் கவனம் தேவை.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியிட மாறுதல்கள் கிடைக்கும். பதவி உயர்வுகளும் உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவீர்கள். இருந்தாலும், சில பிரச்சனைகள் ஏற்பட்டு வீண்பழி உண்டாகும்.

பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கட்சிகளில் உயர் பதவிகள் கிடைக்கும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். மொத்தத்தில் இந்த புது வருடம் புதிய முயற்சிகளின் மூலம் வெற்றிகளை பெறுவீர்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!