மகர ராசிக்காரர்கள் புத்தாண்டில் தடைகளை கடந்து சாதிப்பார்கள்..!


நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், மகர ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

மற்றவர்களுடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சேருவாரகள்.

வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பணியில் இருப்பவர்களுக்கு புதிய இடங்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வாழ்க்கைத்துணை உடனான கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். மொத்தத்தில் இந்த புது வருடம் தடைகளை கடந்து சாதிக்கும் வருடமாக இருக்கும்.Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!