‘நீ விருப்பப்பட்டபடியே யாரோட வேண்ணாலும் வாழு’ – கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி..!


கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவியையும், கொலை செய்ய உதவிய கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் என மூவரையும் இரண்டே நாளில் கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, திருக்கூர்ணம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் மணிவண்ணன். 26 வயதான இவர், அங்கு தனியார் ஊழியராக உள்ளார். இந்நிலையில், கடந்த 23 -ம் தேதி இரவு, கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் மணிவண்ணனின் தலை கல்லால் நசுக்கப்பட்டு இறந்துகிடந்தார். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அங்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸாருக்கு, ‘மணிவண்ணனை யாரோ திட்டமிட்டு கல்லால் நசுக்கி கொலை செய்திருக்கிறார்கள்’ என்ற சந்தேகம் ஏற்பட்டது.


ஆனால், மணிவண்ணன் சொந்த மாவட்டத்தை விட்டு, பக்கத்து மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததால், கொலையாளியை நெருங்குவது கடினம் என்றே பலரும் நினைத்தனர். தனது கணவர் மணிவண்ணன் இறந்த தகவலைக் கேட்டதும், திருக்கூர்ணத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார் அவரின் மனைவி காயத்ரிதேவி. 21 வயதே நிரம்பிய அந்த இளம்பெண், அப்பாவியாக கணவரின் இறந்த உடலுக்கு முன்பு கதறி அழுதார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பலரும் காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்து கண் கலங்கினர். காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்த அரவக்குறிச்சி போலீஸாருக்கும் அவர்மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், பல கோணங்களில் விசாரித்த போலீஸார், கடைசியில் காயத்ரிதேவியின் பக்கம் திரும்பினர். “என் கணவர் மேல நான் உசுரா இருந்தேன். அவர் இல்லாமப் போனதால், நானும் செத்துப் போயிருவேன்” என்று கூறிவந்துள்ளார். ஆனால், அவர்மீது இருந்த சந்தேகத்தால், தங்கள் பாணி கிடுக்கிப்பிடி விசாரணையை போலீஸார் நடத்தியுள்ளனர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!