கள்ளக்காதலிக்காக கிளிஜோதிடரை கொன்ற வாலிபர் பகீர் வாக்குமூலம்..!


திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதி புதூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கிளிஜோதிடம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பகலில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு ரமேஷ் சென்றார்.

அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ரமேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை சரமாரியாக வெட்டினார். இதில் ஜோதிடர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதன்பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துண்டுபிரசுரங்களை வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் ரமேசை, நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு (34) வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசாரணையில் மேலும் கிடைத்த பரபரப்பு தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் திருப்பூரை சேர்ந்த திருமணமான 32 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கிளி ஜோதிடர் ரமேஷ், பெண்களை வசியம் செய்வதில் கை தேர்ந்தவர் என தெரிந்து அவருடைய உதவியை ரகு நாடினார். இதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்ட ரமேஷ், அந்த பெண்ணின் மனதை மாற்றி ரகுவிடம் பழகவைத்துள்ளார்.

அதை தொடர்ந்து அந்த பெண்ணும், ரகுவும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை மீட்டுத்தரக்கோரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணை ரகுவிடம் இருந்து பிரித்து அவருடைய கணவருடன் அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதலியை மறக்க முடியாத ரகு, மீண்டும் கிளிஜோதிடரான ரமேசை நாடினார். இதற்காக ஜோதிடர் ரமேஷ் ரூ.2 ஆயிரத்தை ரகுவிடம் இருந்து வாங்கி விட்டு அந்த பெண் இருக்கும் இடத்தை தெரிவிக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது ரகுவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

கள்ளக்காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததுடன், அவளுடன் ரமேஷ் தொடர்பில் இருக்கலாமோ? என்ற சந்தேகமும் ரகுவுக்கு ஏற்பட்டது. இதனால் ரகு, நேற்று முன்தினம் ரமேசை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்று இருக்கலாம்.

இவ்வாறு போலீசார் கூறினர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரகுவை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரமேசை வெட்டி கொன்ற ரகு, கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோரிடம், அவள் இருக்கும் இடத்தை தெரிவிக்காவிட்டால் உங்களுக்கும் இதே கதிதான் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!