வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாப மரணம்..!


வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் பரிதாமாக உயிரிழந்துள்ளான்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளை பட்டியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் மதுகண்ணன். இன்று காலை தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு ஒன்று சிறுவனின் காலில் கடித்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். உடனே அருகில் இருந்தவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!