யாஷிகா பற்றி பிராச்சி தப்பா நினைக்க மாட்டார் – மனம் திறக்கும் மஹத்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நெருக்கமாக இருந்த மகத், ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய மூவருமே தற்போது தமிழ்த்திரையுலகில் பிசியாக உள்ளனர்.

சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மகத், ஹீரோவாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ள படம் ஒன்றில் மகத்- ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படம் ஒரு ரொமான்ஸ் காமெடி படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் வெங்கடேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படத்திலும் மகத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மகத்தின் காதலியாக யாஷிகா நடிக்கவுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத்தை யாஷிகா காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் காதலர்களாக நடிக்கவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் யாஷிகாவும் சேர்ந்து நடிப்பது குறித்து எனது காதலி பிராச்சிக்கு ஏற்கனவே தெரியும். அவர் எதுவும் தவறாக நினைக்க மாட்டார். ஏனென்றால் இது எனது வேலை என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

யாஷிகாவுக்கு நான் தான் வழிகாட்டியாக இருக்கிறேன் என நிறைய பேர் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதால் எங்களை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வரலாம். அதை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் நான் நேர்மையாக நடக்கிறவன். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவன்”, என இவ்வாறு அவர் தெரிவித்தார்.-SOURCE : webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!