சபரிமலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்… பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!!


சபரிமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதைத்தொடர்ந்து பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் போது மிகவும் கவனம் தேவை என எச்சரிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. சபரிமலையில் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சன்னிதான பகுதிகளில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தபடி உள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.


நேற்று சபரிமலையில் பம்பை ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் திருவேணி பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல போலீசார் உத்தரவிட்டனர்.

இதுதவிர வனப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டனர்.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!