பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்..!


கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. நவக்கிரகங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டே பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்தகங்கை தீர்த்தத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது சிறப்புக்குரியது. அன்று அதிகாலையில் சிவனும் சக்தியும், குப்தகங்கை யின் கிழக்கு கரையில் வீற்றிருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பாவங்கள் நீங்கும்.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!