சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு – குற்றவாளிகள் மூன்று பேருக்கும் மரண தண்டனை…!


அகமத்நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13 ந்தேதி 3 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே, சந்தோஷ் கோரக் பாவல் மற்றும் நிதின் கோபிநாத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் 350 பக்க குற்றப்பத்திரிகையை அகமத்நகர் சிறப்பு கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த நீதிபதி சுவர்ணா கெவாலே, கடந்த வாரம் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அப்போது, 3 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆனதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தண்டனை விவரத்தை அறிவிப்பதாக கூறி, வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

மகாராஷ்டிராவின் அகமதாபாத் நகர் சிறப்பு கோர்ட் குற்றவாளிகள் 3 பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு கூறி உள்ளது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!