ஒரே வாரத்தில் கருவளையம் காணாமல் போக இதோ சூப்பர் டிப்ஸ்..!


இன்று பல பெண்களிற்கு உள்ள முக்கிய குற்றச்சாட்டு கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையமே. இதற்கு முதற் காரணி சரியான தூக்கம் இன்மை.

அத்துடன் நீண்ட நேரம் கணனி பயன்படுத்தல், மன அழுத்தம், நீண்ட நேர வேலை போன்றவையும் காரணமாகின்றது. அத்துடன் கண்களைத் தேய்த்தல், வயதடைதல், ஆரோக்கியமற்ற உணவுகளும் இதற்கு முக்கிய காரணம்.

மேக்கப் போடுவதனால் தற்காலிக தீர்வைத் தருகின்ற போதிலும், நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. தீர்வைப் பெறுவதற்கு முதலில் செய்ய வேண்டியது சரும ஈரப்பதத்தைப் பேணுவதே.

இயற்கை முறையில் கருவளையத்தைப் போக்குவது எப்படி?

1. தக்காளி.
தக்காளியில் குறைந்தளவு சிட்டிக் அமிலம் உள்ளது. இதனால் கண்ணின் கீழ்ப் பகுதியை இலகுவாக சுத்தம் செய்ய முடியும். தக்காளியை சிறு துண்டாக வெட்டி கண்ணின் கீழ்ப் பகுதியில் வைக்கவும். தக்காளிச் சாறு முழுமையாக சருமத்தை சென்றடைந்த பின்பு தக்காளித் துண்டை நீக்கி நீரினால் கழுவவும். பின்பு கிறீமைப் பயன்படுத்தவும்.

2. பாதாம் எண்ணெய்.
பாதாம் எண்ணெய்யில் அதிகளவான விட்டமின் ஈ இருப்பதனால் சருமத்தை மிருதுவாக்கும். இரவில் தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய்யால் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் கழுவவும் இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருவளையம் நீங்கும். கசப்பான பாதாம் எண்ணெய்யைத் தவிர்த்து இனிப்பான பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதே சிறந்தது.

3. உருளைக் கிழங்கு.
உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி அதன் சாற்றை பஞ்சினால் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிற்கு தடவி, அது உலர்ந்த பின்பு நீரினால் கழுவவும். உருளைக்கிழங்கில் அதிகளவான விட்டமின் சி, நொதிகள் மற்றும் ஸ்டார்ச் இருப்பதனால் சரும நிறம் இலகுவாக மாற்றமடையும்.


4. கிறீன் டீ
கிறீன் டீ பையினை சுடு நீரினால் ஊற வைத்து அதனை குளிரூட்டியில் வைக்கவும். குளிரான கிறீன் டீ பையினை கண்களி பகுதிகளில் வைப்பதனால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கருவளையங்களைப் போக்கும். அத்துடன் கண் வீக்கத்தையும் நீக்கும்.

5. வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காயைச் துண்டுகளாக வெட்டி கண் பகுதிகளில் வைக்க முடியும் அல்லது வெள்ளரிக்காய்ச் சாற்றையும் பயன்படுத்த முடியும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதுடன் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

6. எலுமிச்சைச் சாறு.
இது சிறந்த சுத்தப்படுத்தியாகச் செயற்படும். இதன் சாற்றை எடுத்து கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிற்கு பூசி உலர்ந்த பின்பு நீரினால் கழுவவும். ஆனால் கண்களின் உட்பகுதிகளில் சாறு படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள விட்டமின் சி சரும நிறத்தை வெளிரச் செய்கின்றது.

7. பால்.
பாலை குளிரூட்டியில் வைத்து கட்டிகளாக எடுத்துக் கொள்ளவும். இதனை கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைப்பதனால், இதில் உள்ள லக்டிக் அமிலம் சரும நிறத்தைப் போக்கும். அத்துடன் வீக்கத்தையும் நீக்கி விடுகிறது.

8. மஞ்சள்
மஞ்சள் பக்டீரியாத் தொற்றுக்களை நீக்குவதுடன் சருமத்தின் நிறத்தையும் பாதுகாக்கும். மஞ்சள் பவுடரை பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து கரு வளையத்திற்கு பயன்படுத்துவது சிறப்பானது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!