பஸ்சின் அடியில் இரண்டு சிறுவர்கள் மீட்பு… விசாரணையின் போது அதிர்ச்சித் தகவல்…!


சீனாவை சேர்ந்த 2 சிறுவர்கள் சுமார் 80 கிலோமீட்டர் பஸ்சின் அடியில் தொங்கி கொண்டே பயணம் செய்து உள்ளனர்.

இது குறித்து சீனா ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

சீனாவின் தெற்கு குவாங்சியில் உள்ள மிகவும் ஏழ்மையான கிராமம் ஒன்றில் உள்ள 2 சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் இருக்கும் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு செல்ல முடிவு செய்து உள்ளனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை.

80 கிலோமீட்டர் தள்ளி ஒரு பஸ் நிலையத்தில், வைத்து மண் படிந்த நிலையில் சிறுவர்களை பார்த்து உள்ளனர். இருவரும் பஸ்சின் அடிப்புறம் பதுங்கி சுமார் 80 கிலோமீட்டர் பஸ்சின் அடியின் பதுங்கி பயணம் செய்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 23 ந்தேதி சிறுவர்களை காணவில்லை என ஆசிரியர்கள் புகார் கூறி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!