ஐ.எஸ் தீவிரவாதிகள் – டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தின் போது தாக்குதல் நடத்த திட்டம்…!


ஐ.எஸ் தீவிரவாதிகள் கிராபிக் டிசைனால் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் 25-ஆம் திகதி உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ளது, இந்த கிறிஸ்துமஸ் தினத்தின் போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறி செய்திகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் தின மார்க்கெட்டில் பொதுமக்கள் பலர் கூடியிருக்கும் வேளையில் தாக்குதல் நடத்தப்படும் என்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.


இந்நிலையில் அதைத் தொடர்ந்து, தற்போது தீவிரவாதிகளுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர். அதில் நீங்கள் எங்களை நாட்டை அழித்ததால், நாங்கள் உங்கள் நாட்டை அழிப்போம் என்று வாசகம் எழுதி, அதில் Big Ben-இன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் முயற்சியில் Birmingham’s பகுதில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் அதிக அளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில் மில்லியன் கணக்கான மக்கள் இங்கு வருவார்கள், அதுமட்டுமின்றி நாட்டின் முக்கிய மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகிக்கும் படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!