குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்…

பஸ்சின் டிரைவர் பார்த்து ரசிப்பதுடன், முன்னால் பார்த்து ஸ்டீரியங்கை இப்படி திருப்பு… அப்படி திருப்பு என சொல்கிறார். ஆனால் அந்த குரங்கோ ஸ்டீரியங் மீது அமர்ந்துகொண்டு அது இஷ்டத்திற்கு பஸ்சை ஓட்டுகிறது.

ஆபத்தை அறியாமல் குரங்குடன் விளையாடி பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்க கூடிய வகையில் நடந்த இந்த காட்சிகளை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பிரகாஷை கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி-யில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பணிக்கு வரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வருவாராம். இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்