மொட்டை மாடியில் தூங்கிய பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!!!


சென்னை பட்டினப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி மைதிலி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

மைதிலி, காற்றுக்காக அடிக்கடி மொட்டை மாடியில் சென்று தூங்குவது வழக்கம். நேற்று இரவும் மைதிலி மொட்டை மாடிக்கு தூங்க சென்றார்.

கணவர் கணேசனும், 3 குழந்தைகளும் 2-வது மாடியில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுப்பி விடுமாறு கூறி விட்டு மொட்டை மாடிக்கு மைதிலி சென்றார்.

இன்று காலை 7 மணி அளவில் கீழ் தளத்தில் உள்ள வராண்டாவில் மைதிலி பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து கணேசனிடம் தகவல் தெரிவித்தனர். அவரும் குழந்தைகளும் ஓடி வந்து பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் காற்றுக்காக மொட்டை மாடிக்கு தூங்க சென்ற மைதிலி தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மைதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!