“இதயத்தில் ஒரு பாகம் எப்போதும் கேரள அணிக்காக துடிக்கும்” – சச்சின் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டில் ஐபிஎல் போல, கால்பந்துக்கென ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) போட்டிகள் 2014ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. நாகார்ஜூனா, சிரஞ்சீவி, அபிஷேக் பச்சன் போன்ற முக்கிய சினிமா நட்சத்திரங்களும், விராட் கோலி, தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களும் அணிகளின் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.

இதில் கேரளா அணியின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். கடந்த 2014ம் ஆண்டு முதல் கேரள அணிக்காக பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு அணியை ஊக்கப்படுத்தி வந்தார்.

தற்போது திடீர் முடிவாக, தன்வசம் உள்ள 20 சதவீத பங்குகளை சச்சின் டெண்டுல்கர் விற்றுள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின் கூறுகையில், ‘அணியை விட்டு விலகினாலும், தன் இதயத்தில் ஒரு பாதி எப்போதும் கேரள அணிக்காக துடித்துக் கொண்டே இருக்கும்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.