சுருள் முடியை பராமரிப்பதில் பிரச்சனையா..? முதலில் நீங்கள் இவற்றை செய்யுங்க..!!


சுருள் முடி உள்ளவர்கள் தங்களுடைய முடிகளை எளிமையாக கையாள முடியாது. ஏனெனில் அவர்களின் முடிகள் மிக அடர்த்தியாக காணப்பட்டாலும், கூட முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடி சிக்கல் விழும்.

இதன் காரணமாகவே அவர்களுக்கு எந்த ஒரு ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாக்களுக்கு செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும்.


சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில டிப்ஸ்:

சுருள் முடி இருப்பவர்கள் தங்களுடைய கூந்தலுக்கு பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

இத்தகையவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதால், முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே சுருள் முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.


மிக அடர்த்தியாக இருக்கும் இந்த சுருள் முடியானது, தலைக்கு அலங்காரம் செய்யும் போது, கைகளுக்குள் பிடிபடாமல் இருக்கும். இதனால் சுருள் முடி இருப்பவர்கள் தங்களது முடிகளுக்கு அலங்காரம் செய்வதற்கு முன்னதாக சிலிக்கான் சீரம் தலையில் தடவினால், கூந்தல் அடங்கி நீளமாகவும் தெரியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!