வடகொரியாவிடம் மட்டும் அமெரிக்கா மண்டியிடுவது ஏன் தெரியுமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!


முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களை முடித்து வைத்த அமெரிக்கா, பல்வேறு நாட்டின் மீது படையெடுத்தாலும், வடகொரியாவிடம் மட்டும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறது.

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இவை அனைத்தும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை மிரட்டுவதற்காக நடத்தப்படுவதாக முதலில் கூறப்பட்டு வந்தது.

ஆனால், உலக நாடுகளே பரிசோதிக்க பயப்படும் ஹைட்ரஜன் அணு குண்டு சோதனையை, வெற்றிகரமாக சோதனை செய்தது வடகொரியா. இதனை நீண்ட நேரத்திற்கு பிறகே அமெரிக்கா உறுதி செய்தது.


அணு ஆயுத நகர்வுகளை இன்ச், இன்ச்சாக கண்காணித்து வரும் அமெரிக்காவுக்கு இது பேரிடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்தே தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு போர் பயிற்சியை அளிப்பதாக கூறி தன்னுடைய படையை கொரிய தீபகற்பத்தில் குவித்து வருகிறது.

அதன்பின்னர், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்ய ஆரம்பித்தது. அவை அனைத்தும் அமெரிக்காவை தாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது.

இதனால், ராணுவ நடவடிக்கையை எடுக்காமல், உலக நாடுகளிடம் இருந்து வடகொரியாவை தனிமைப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு முக்கியமாக பல காரணங்களை கூறுகின்றனர்.


அமெரிக்கா தன்னுடைய நாட்டில் தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் மற்ற நாடுகள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், வடகொரியாவோ அமெரிக்காவையே தாக்கும் வகையில் ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

அந்த ஆயுத சோதனைகளில் சில தோல்விகளை சந்தித்தாலும், பல சோதனைகள் வெற்றி பெற்று வருகிறது. வடகொரியா எந்த மாதிரியான ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை.


மேலும், மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா இருந்தாலும், குறைந்த ராணுவ பலத்தை கொண்ட வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று கூறியிருப்பதால், அமெரிக்கா பின்வாங்குகிறது.

வடகொரிய ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து தாக்கினாலும், அதன் பாதிப்பு அமெரிக்காவுக்கே அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே நேரடியாக போரில் இறங்காமல் அமெரிக்கா அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!