மகத்தை கண்டுக்காத விஜயலட்சுமி – ஐஸ்வர்யாவிடம் புலம்பும் மகத்..!


பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தொடர் சண்டைகளால் சோர்வடைந்து உள்ளனர். இந்நிலையில் முதல் வைலட்கார்ட் எண்ட்ரியாக ‘சென்னை 28’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த விஜயலட்சுமி சென்றுள்ளார்.

அவர் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சிகள் நேற்றைய பிரோமோவிலேயே காட்டப்பட்டாலும், இன்று தான் அவர் உள்ளே செல்லும் காட்சிகளை நிகழ்ச்சியில் காட்ட உள்ளனர்.

மகத்துடன் இணைந்து விஜயலட்சமி சில படங்களில் நடித்துள்ளார். எனவே அவர்கள் முன்னரே அறிமுகமாகி இருப்பார்கள். ஆனால் தன்னையும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவையும் அவர் வேண்டுமென்ற தவிர்ப்பதாக ஐஸ்வர்யாவிடம் மகத் கூறிக்கொண்டு இருந்தார்.

டேனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் விஜயலட்சுமி, “சும்மா வெளியே போகனும்னு சொல்றதுக்கு எதுக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தீங்க” என்று கேள்வி எழுப்புகிறார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!