கோடிக்கணக்கான சொத்தை தானம் செய்த அக்கா..! நெஞ்சை உருக்கிய சம்பவம்..!!


ஈரோடு மாவட்டம் சென்னிமலை சேர்ந்தவர் நாச்சிமுத்து . இவருக்கு நடராஜன் என்ற மகனும் ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடராஜன் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார்.

இவருக்கு நல்ல படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை . ஆனால் அவரின் ஆசையும் நிறைவேறவில்லை..

தொடர்ந்து உடல் நிலை மோசமானதால் இறப்பதற்கு முன் தந்தையிடம் தன் சொத்தை அம்மாபளையம் அரசு பள்ளிக்கு தானமாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பது என் ஆசை என கூறியுள்ளார்.


இதனையடுத்து நாச்சிமுத்து அரசுபள்ளிக்கு எழுதிவைத்த நிலத்தை தனது மகளிடம் கொடுத்தார்.

இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும். இது குறித்து ஈஸ்வரி கூறுகையில் தம்பி நடராஜன் எம்.பி.ஏ மற்றும் எம்.பி.எல் பட்டம் பெற்றுள்ளார்.

படித்து முடித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவரின் கணவாக இருந்தது.

ஆனால் உடல் பாதிக்கப்பாட்டு 10ஆண்டுகள் படுக்கையில் இருந்ததால் 47 வயதில் இறந்துவிட்டார்.

அப்போது அப்பா தம்பியின் ஆசை இதுதான் என கூறி அந்த உயிலை கொடுத்தார். அதன்படி தம்பியின் ஆசை தற்போது நிறைவேற்றியுள்ளேன். இனிமேல் அந்த நிலம் பள்ளிக்கு தான் சொந்தம் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!