மனைவின் நடத்தையில் சந்தேகம்… கணவன் செய்த வெறிச் செயல்…!


கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முனியப்பன் வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து புவனேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வீட்டில் புவனேஸ்வரி தூங்கி கொண்டிருந்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு முனிப்பன் தன் மனைவி மீது ஒயர் மூலம் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். இதில் உயிருக்கு போராடிய புவனேஸ்வரியை மேலும் கயிற்றை கொண்டு அவரின் கழுத்தில் இறுக்கி அவரை கொலை செய்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த முனியப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!