மனைவி இல்லாத சோகம் – பிள்ளைகளை கொன்று விட்டு தந்தையும் தூக்குப்போட்டுத் தற்கொலை..!


நாமக்கல் அருகே மகன், மகளை கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த காவக்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 36) விவசாயி. இவரது மனைவிசசிகலா. இவர்களுக்கு வீரபத்திரன் (வயது 7) என்ற மகனும், ஜெயா (4) என்ற மகளும் உள்ளனர்.

சசிகலா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு ராஜகோபால் மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ராஜகோபால் மற்றும் அவரது மகன் வீரபத்திரன், மகள் ஜெயா ஆகியோர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.


இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 3 பேரின் பிணங்களை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் மகன், மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார்? என்பது தெரியவில்லை. மனைவி இறந்ததால் அவரால் மகன், மகளை சரியாக கவனிக்க முடியவில்லை இதன் காரணமாக அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!