அரசியலில் ரஜினியுடன் இணைய வாய்ப்புள்ளது – கமல் அதிரடி..!


ரஜினியுடன் அரசியலில் இணைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் கூறிவுள்ளார்.

பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் களம் இறங்கியுள்ளனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், இன்னும் கட்சி தொடங்கவில்லை. அரசியல் களத்துக்கு தயாராகும் வகையில், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி வருகிறார்.

நீண்ட நாள் நண்பர்களான இவர்கள் அரசியலிலும் கூட்டணி அமைப்பார்களா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.


இந்நிலையில், இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு தனியார் தொலைகாட்சியில் பதிலளித்த கமல்ஹாசன, “நாங்கள் இருவரும் அரசியலில் இணைவது சுலபமான விஷயம் இல்லை. ஆனால், அது நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். குறைந்தபட்சம் தமிழகத்திலாவது போட்டியிடுவோம். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலை நாங்கள் மாற்றுவோம். அதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.” என்று கூறினார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!