கை அசைச்சா தான் போவோம்.. இல்லனா இங்கேயே சாவோம் – காவேரி வாசலில் உருகும் தொண்டர்கள்…!


திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல் வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரிமருத்துவமனை முன்பு குவிந்தனர்.

நேற்று மாலை முதல் தொண்டர்கள் காவேரி மருத்துவமனைமுன்பு குவிந்து வந்தனர். கலைஞரின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பாட்டு பின்புஅதனைசரி செய்யப்பட்டுதற்போதுசீராகஉள்ளது எனநேற்று காவேரி மருத்துவமனைஅறிக்கை வெளியிட்டு இருந்தது.

அதுமட்டுமில்லாமல்,தொண்டர்களைகலைந்து செல்லும்படிகாவல் துறையினர் எவ்வளவுசொல்லியும்தொண்டர்கள் பலர் அந்தஇடத்தில இருந்துநகர்வதாக இல்லை.

இதே போன்று கோபாலபுரம் இல்லம் முன்பும், தொண்டர்கள் குவிந்ததால்,வெளியில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், காவேரி மருதுவமனைவெளியில் கூடி இருக்கும் தொண்டர்களில் சிலர், “கலைஞர் கை அசைச்சா நாங்க வீட்டுக்கோ போவோம்..இல்லனா இங்கேயே சாவோம் என எமோஷனாக பிரபல தனியார்தொலைக்காட்சிக்குபேட்டி அளித்துள்ளனர்

மேலும் வேலூரை சேர்ந்த தொண்டர் ஒருவர்கலைஞர்நலம் பெறவேண்டும் என மொட்டைபோட்டு உள்ளார்.பல்லாயிரக்கணக்கானதொண்டர்கள்பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

“எழுந்து வா தலைவா” என காவேரிமருத்துவமனைமுன்பு நின்றுதொண்டர்கள் கோஷம் எழுப்பிவருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!