சனீஸ்வரன் என பெயர் வரக் காரணமான கதை பற்றி தெரியுமா..?


இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும்.., ஏன் கடவுளும் கூட சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று அனைவரும் கூற கேட்டிருப்போம்.

அது எப்படி? கடவுளை சனி பகவான் பிடித்திருப்பான் என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா…?

அதற்கான விடையை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…

ஒரு நாள் சனி பகவான் தேவலோகத்தை நோக்கி விரைந்து செல்கிறார். இதை கண்ட தேவர்கள் அனைவரும்.., சனி இன்று யாரை பிடிக்க போகிறாரோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

ஓடிய அனைவரும், ஒரு இடத்திற்கு சென்று ஒளிந்துகொள்கின்றனர். ஆனால் சனி பகவானோ தேவலோகத்தை கடந்து செல்கிறார். இதை கண்ட தேவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

தாங்கள் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியில் வந்த தேவர்கள், சனி எங்கு தான் செல்கிறார் என்பதை அறிய அவரை பின்தொடர்கின்றனர்.

சனி பகவானோ.., கைலாயத்தை நோக்கி வேகமாக செல்கிறார்.

சனிவருவதை அறிந்த சிவபெருமான் தன்னை தான் அவர் பிடிக்க போகிறார் என்பதை ஊகித்து அவர் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிய இடம் தேடுகிறார்.


திருமாலின் வழிகாட்டுதல் பேரில்., அவர் ஒரு குகையில் சென்று மறைந்து கொண்டு அதன் வாசலை மூடிவிடுகிறார்.

அதன் பின் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார். சில வருடங்களாக அவர் தியானத்திலேயே இருக்கிறார்.

பின் ஒருநாள் குகையில் இருந்து சிவபெருமான் வெளியில் வருகிறார். அங்கு சனிபகவான் அவருக்காக காத்திருக்கிறார்.

சிவபெருமான் சிரித்துக்கொண்டே பார்த்தாயா சனி.., உன் பிடியில் இருந்து நான் தப்பித்துவிட்டேன் நீ என்னை பிடிக்கும் காலம் கடந்துவிட்டது என்றார்.

ஆனால் சனியோ, சுவாமி.., நான் உங்களை முன்பே பிடித்துவிட்டேன். நீங்கள் என் பிடியில் இருந்ததால் தான் ஏழரை ஆண்டுகளாக பார்வதி தேவியை கூட பார்க்க முடியாமல் இந்த குகையில் நீங்கள் இருந்தீர்கள் என்றார்.

சனி கூறியதை கேட்டு வியப்படைந்த சிவபெருமான், இறைவன் என்றும் பாராமல் நீ உன் கடமையை சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் என்னுடைய பெயரை உனக்கு பட்டமாக தருகிறேன்.

இன்று முதல் உன்னை எல்லோரும் சனீஸ்வரன் என்று அழைப்பர் என வாழ்த்துகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!