மனைவி செய்த பிரியாணியால் கணவன் பொலீஸ் நிலையத்தில்… நடந்தது என்ன?


தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வரதானபெட் இலாண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் கம்யூட்டர் என்ஜினியராக உள்ளார். இவரது மனைவி மானசா

ராஜேந்திர பிரசாத் குடிபழக்கம் உடையவர். தினமும் மதுவருந்தி விட்டு வத்து தனக்கு பிடித்தமான பிரியாணியை சமைக்க கோருவார். மானசாவுக்கு சரிவர சமையல் தெரியாது, இதானல் நீணட் நாட்களாக இவர்களுக்குள் சண்டை நடந்து வந்தது.

இந்த தம்பதிகளுக்கு கடந்த் நவம்பர் மாதம் திருமணம் நடந்து சரியாக ஒருவருடம் ஆகிறது. நன்றாக பிரியாணி செய்யவில்லை எனக் கூறி மானசாவை ராஜேந்திர பிரசாத் கடந்த ஜனவரிமாத வீட்டை விட்டு விரட்டி உள்ளார்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சமாதானபடுத்தி கடந்த ஜூன் மாதம் வீட்டிற்கு அனுப்பிவைத்து உள்ளனர். இந்த நிலையில் இதே பிரச்சினை நேற்று நடந்து உள்ளது.

மீண்டும் நேற்று மது போதையில் வந்த ராஜேந்திர பிரசாத் நன்றாக பிரியாணி செய்யவில்லை என கூறி மனைவியிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் மனைவியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்.

இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரது உதவியுடன் மானசா இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இது தொடரபாக் வழக்குப்பதிவு செய்த போலிசார் கணவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முயற்சித்து உள்ளனர்.

ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வழிகளை மாற்றாமல் மானசாவை தொடர்ந்து துன்புறுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!