கற்பழிப்பு புகாரில் சிக்கிய இலங்கை வீரர் குணதிலகாவிற்கு தடை..!


தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தனுஷ்கா குணதிலகாவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இன்றுடன் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விளையாட்டின் தேசிய ஆட்சிக்குழு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதித்துள்ளது.

எதற்காக தடைவிதிக்கப்பட்டது என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர் ஒருவர் ஹோட்டல் அறையில் குணதிலகா முன்பு வைத்து நர்வே பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறியதால் இந்த தடைவிதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!