உடலை எரிக்க வைக்கும் நவீன லேசர் துப்பாக்கியை கண்டு பிடித்த சீனா..!


சீனா ஒரு அதி நவீன லேசர் துப்பாக்கி தயாரித்து உள்ளது. இதன் மூலம் நீண்ட தூரத்தில் இருந்தும் மனித உடலை எரிக்க வைக்க முடியும்.

சீனா ஒரு ‘லேசர் ஏகே -47’ என்ற துப்பாக்கியை தயாரித்து உள்ளது இதன் மூலம் 800 மீட்டர் (அரை மைல்) தொலைவில் இருந்தும் இலக்குகளை மற்றும் ஆடைகளைத் தீ வைக்க முடியும் இது உண்மையாக இருந்தால் அது வியப்பாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கும் என தெரிய வந்து உள்ளது.

தென் சீன மார்னிங் போஸ்ட் தகவல் படி ZKZM லேசர் என்று அழைக்கப்படும். இந்த துப்பாக்கி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துபாக்கியை வெறும் கண் மூலம் காண முடியாது கார்பனைசேஷன் கண்ணாடி மூலம் காண முடியும்.

இந்த ஆயுதம், ZKZM-500 லேசர் தாக்குதல் துப்பாக்கி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் 800 மீட்டர் தூரத்தில் இருந்தும் ஆடையில் நெருப்பு பற்றவக்க முடியும். இந்த துப்பாக்கி 3 கிலோ எடை கொண்டது. ஒரு ரிச்சார்ஜ் செய்யப்படும் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. சுமார் 2 விநாடிகளில் 1,000 ‘ஷாட்ஸ்’ சுடலாம். இது ஏற்படுத்துகிற வலி சகிப்புத்தன்மைக்கு அப்பால் இருக்கும்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!