காட்பாடி அருகே சோகம் – மதுவில் விஷம் அருந்தி தாய் – மகள் தற்கொலை..!


காட்பாடி அருகே தாய் மற்றும் மகள் இருவரும் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். மேலும் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் வசித்து வருபவர் செல்லையன். வீடு வாசல் ஏதும் இல்லாமல் பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்து செல்லையன், அவரது மனைவி ராஜேந்திரா, மகள் சகுந்தலா ஆகியோர் சிக்கு முடி விற்கும் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் மூவருக்கும் குடிபழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு மூவரும் மது அருந்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜேந்திரா மற்றும் சகுந்தலா ஆகிய இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தியுள்ளனர். பின்பு செல்லையனும் விஷம் அருந்தியுள்ளார். இதில் ராஜேந்திரா மற்றும் அவரது மகள் சகுந்தலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் செல்லையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த திருவலம் காவல்துறையினர் இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக வேலூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.-Source: PUTHIYATHALAIMURAI

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!