சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்… அதிர வைத்த காரணம்..!


திருமணத்திற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 27 வயதான பிரியங்கா என்பவர் பணியாற்றி வந்தார். ஆந்திராவை சேர்ந்த இவர் அலுவலக நேரம் முடிந்த பின்னர் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட அவர் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியங்கா உயிரிழந்தார். உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த வாரம் பிரியங்காவின் திருமணத்திற்காக அவரது பெற்றோர் மாப்பிளை பார்த்ததாக தெரிகிறது. பெற்றோர் பார்த்த மாப்பிளை பிடிக்காததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.-Source: PUTHIYATHALAIMURAI

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!