28.05.2018 இன்றைய ராசிபலன்


மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாலை 5.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளை் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: மாலை 5.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தல் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். மாலை 5.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மகரம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பர். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புண்ணிய ஸ்த லங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உற்சாகமான நாள்.

மீனம்: மாலை 5.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கி ட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!