வெறும் தகரத்தை வைத்து தந்தையும் மகனும் செய்த தில்லாலங்காடி வேலை அம்பலம்..!


டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நரேந்திரர். இவரை வீரேந்திர மோகன்பிரார் , பாபா பிரார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் சந்தித்துள்ளது. அப்போது தகரம் ஒன்றை நரேந்திரரிடம் காட்டி, இது மிகவும் சக்தி வாய்ந்தது, இதனை வைத்திருப்பவர்களுக்கு கோடி கணக்கில் பணம் சேரும் என்று கூறியுள்ளனர். மேலும், இதனை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்கு பத்து கோடி தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஒரு கோடியை முன்பணமாக கொடுத்து டோக்கன் போட்டுக் கொள்ளலாம் என்றனர்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் சோதனை நடத்தி, அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இதனை நாசாவிற்கு விற்கலாம். நாசா அமைப்பு இதற்கு 34,000 கோடி கொடுக்க தயாராக உள்ளது என்றும் கூறி நரேந்திராவை நம்ப வைத்துள்ளனர்.அதன் பிறகு, அவரிடம் தகரத்தை கொடுத்துவிட்டு ரூ.80 லட்சத்தை பெற்றுள்ளனர். பின்னர், ரூ.20 லட்சத்தை வாங்கிக் கொண்டு, தகரத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆராய்ச்சி முடிந்து நாசாவிற்கு விற்றால் கிடைக்கும் லாபத்தில் 70-30 பிரித்துக் கொள்ளலாம் எனவும் நரேந்திரரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தகரத்தில் இருந்து அணு கதிர் வீச்சு வரும். அதிலிருந்து காத்துக் கொள்ள தனியாக உடை வாங்க வேண்டும் எனக் கூறி, வெள்ளி நிற உடை வாங்கி ரூ.2,00,000 பணத்தையும் வாங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் சென்று இரண்டு மாதம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நரேந்திரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி கும்பல் பயன்படுத்திய சிம் கார்டுகள் மூலமாக அவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். வீரேந்திரர் மோகன் பிரார், பாபா பிரார் இருவரும் தந்தையும் மகனும் ஆவார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!