உறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தம்பதிகள் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்..!


உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீங்கள் உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…!

மன அமைதி
உடலுறவுக்கு பின்னான விளையாடுகள் உங்களை அமைதிப்படுத்துகிறது. பொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும்.

முழு இன்பம்
உடலுறவில் ஈடுபட்ட முழு திருப்தியினை இந்த உடலுறவுக்கு பின்னர் விளையாடும் விளையாட்டுகள் தருகின்றன.

வலிமையான உறவு
உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.

நெருக்கம்
இந்த விளையாட்டுகள் தம்பதியினருக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது.

மீண்டும் உடலுறவு
உடலுறவுக்கு பின்னர் விளையாட்டுகளில் ஈடுபடுவது மீண்டும் உங்களை உடலுறவு கொள்ள தயார் செய்யும்.

ஏன் இதில் ஈடுபாடு இல்லை?
ஆண்கள் உடலுறவில் உச்சமடைந்த பிறகு தூங்க வேண்டும் என்றோ அல்லது சற்று ஓய்வு தேவை என்றோ நினைக்கிறார்கள். இதனால் அவர்களால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளில் ஈடுபட முடிவதில்லை. ஆனால் உடல் உறவுக்கு பின்னரான விளையாட்டுகளில் ஈடுபடும் தம்பதிகள் உடலுறவில் முழுமையான திருப்தியடைகின்றனர். தொடர்ந்து இதில் ஈடுபட நினைக்கின்றனர்.

எதற்காக இது?
உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் அவரது மனதை மகிழ்ச்சியாக்கும்.

எவ்வளவு நேரம்?
இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.

ஏன் இது முக்கியம்?
உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!