ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த கும்பல் – குழந்தையை சாலையில் வீசிய கொடூரம்!


வேலை வாங்கி தருவதாக கூறி ஓடும் காரில் இளம்பெண்னை கற்பழித்து அவரது 3 வயது குழந்தையை சாலையில் வீசிய கொடூரம் பரபரப்பை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு, வேலை வாங்கி தருவதாகவும் இதற்காக தன்னை வந்து சந்திக்கும்படியும் ஆர்.கே.மெகதா என்கிற நபர் அவரிடம் கூறி உள்ளார்.

இதனை நம்பி இளம்பெண் தனது குழந்தையுடன் அந்த நபரை சந்திக்கச்சென்றார். அப்போது ஆர்.கே. மெகதா அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் அவர் மயங்கினார்.

பின்னர் ஆர்.கே. மெகதாவும் அவருடைய நண்பரும் மயக்கமடைந்த இளம் பெண்ணையும், அவருடைய குழந்தையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஓடும் காரில் இளம்பெண்ணை அவர்கள் இருவரும் கற்பழித்தனர்.

அப்போது, இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை அவர்கள் காரில் இருந்து சாலையில் தூக்கி வீசிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தையை அருகில் இருக்கும் கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், முசாபர்நகரின் சாபர் பகுதியில் அந்த இளம்பெண்ணை இறங்கிவிட்டு அவர்கள் இருவரும் காரில் தப்பி சென்றனர். மயக்கம் தெளிந்த பிறகு வீடு திரும்பிய இளம் பெண் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், “ஆர்.கே. மேத்தா என்பவர் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து அவரும் அவரது நண்பரும் தன்னை வன்புணர்வு செய்தனர்” என்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.-
Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!