உத்தரபிரதேசத்தில் பயங்கரம் – பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த கேவலம்..!


இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலத்தில் உள்ள கம்லாபூர் பகுதியை சேர்ந்த 50 வயதான குறித்த நபர் விவாகரத்து பெற்ற 32 வயதுள்ள தனது மகளை திருவிழாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

திருவிழாவிற்கு மகளை அழைத்துச் சென்ற தந்தை அவரது நண்பர் மான் சிங்கிற்கு அழைப்பை ஏற்படுத்தி திருவிழா நடக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அழைப்பிற்கு ஏற்ப மான் சிங்கும் மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் தந்தை தன் மகளை மான் சிங்கின் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது இன்னொரு நண்பர் மீரஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் வைத்து மகளை தந்தையும் தந்தையின் இரு நண்பர்களும் மாறி மாறி 18 மணிநேரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதன்பின்னர் அந்த கொடூரர்கள் பிடியில் இருந்து தப்பித்த அந்த பெண் வீட்டிற்கு சென்று தனது அம்மாவிடம் அனைத்து விஷயத்தையும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது அம்மா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மீரஜை கைது செய்துள்ளதோடு தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தையையும், மான் சிங்கையும் தேடி வருகின்றனர்.-Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!