தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம் – சத்யராஜ் அதிரடி..!


தமிழிசை தன்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயக்குநர் பாரதிராஜா, அமீர், ராம், தங்கர் பச்சான், வெற்றி மாறன், வி.சேகர், கவுதமன், செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய சத்யராஜ், தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தவறுகள் நடந்ததே இல்லை. எதிலும் நேர்மை காத்து வருகிறேன். ஐடி ரெய்டு வந்தால் எதுவும் தேறாது.

ஒரு அப்பா வேடத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்து, ஒரு பெரிய தலைவர் பயப்பட வேண்டாம்.

காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி என்று சத்யராஜ் தெரிவித்தார்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!